‘மாடித் தோட்டத்தின் மூலம் மருத்துவம் மட்டுமல்ல..வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். ‘‘நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்’’ என்று பெருமையோடு சொன்னவர், மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு. பொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவ...